மட்டு நகரும் மத்திய கல்லூரியும்.........

மீன்கள் பாடிய தேசமொன்றில் படித்து திரிந்த போது...

இலங்கையின் மிகப் பழமையான கல்லூரியில் பயின்ற கலமும் மட்டக்களப்பு மண்ணில் சுற்றித்திரிந்த நாட்களும் இப்போது நிறைய நிறைய நினைவுக்கு வருகிறது.என்னை போலவே இன்று உலகம் முழுவதிலும் சுற்றிக் கொண்டுதிரியும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஊற்றான எனது கல்லூரி குறித்து இணையங்களில் அவ்வளவு அதிகமாகக் காணக் கிடைக்கவில்லை.

எனது இந்த பதிவின் நோக்கம் அன்றைய எனது பொழுதுகளையும் நண்பர்களையும் சம்பவங்களையும் மீட்டிக் கொள்ளுவது.
அத்தோடு மட்டக்களப்பு பற்றிய தகவல்கள் சேதி களைச் சொல்லுவதும்.

சீமைப் பனைகள்,வாவியோரத்து இருக்கைகள், முற்றவெளி,காதல் வீதி ,கிழங்குக் கடைகள்(உலகில் எங்கு தேடியும் கிடைகாத அற்புத்க் கடைகள் இது பற்றி பெரிய கட்டுரையே எழுதலாம்.)என்று பள்ளிக்காலத்தில் துள்ளிதிரிந்த இடங்களை எவன் மறப்பான்.

இந்த பதிவினைப் பார்க்கும் நிறைய பேருக்கு மட்டக்களப்பைத் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருகிறது.இலங்கையின் கிழக்கு பகுதியில் அல்லது தமிழீழத்தின் தென் பகுதியில் அமைந்திருக்கும் கடலும் கடல்நீரேரியும் சூழ்ந்த மீன்கள் துள்ளிவிளையாடும் அழகான நகரம்.ஒரு காலத்தில் பாடித்திருந்த மீன்களின் பட்டைக் கேட்டதாக எமது கல்லூரி முன்னாள் அதிபர் காசிநாதர் எழுதியுள்ளார்.இப்போது அந்தப் பாட்டை கேட்க முடியவில்லை.
மட்டக்களப்பை விட்டு நிறையத்தூரம் வந்த பின்னர்தான் அதன் அழகு தெரிகிறது. எனக்கு தெரிந்து இலங்கயில் உள்ள அழகான நகரங்களுக்குள் மட்டக்களப்பை முதல் வரிசையில் வைக்க முடியும்.

கவிதையில் காசி ஆனந்தன்,சினிமாவில் பாலு மகேந்திரா என்று நமக்கு நெருக்கமாக
இப்போது இருபவர்கள் முதல் இலங்கை பத்திரிகையுலகில் குறிப்பிடத்தகுந்தவர்களான எஸ்.டி.சிவநாயகம் , த.சிவராம் என்று தொடங்கும் நீண்ட பரம் பரியமும் முதலில் மத்திய கல்லூரியிலும் பின்னர்
புனித மிக்கேல் கல்லூரியிலும் படித்த சுவாமி விபுலானந்த அடிகள் முதல் வீ.சீ.கந்தையா ,F.X.C.நடராசா அடங்கலாக தமிழ்,இலக்கிய,வரலாற்றுப் பாரம் பரியத்தைக் கொண்ட பலரை தந்த பூமி மட்டக்களப்பு.

இலங்கயின் முதல் பாடசாலைகளுள் ஒன்றாக 1814 இல் ஆரம்பிக்கபட்ட மெதடிஸ்த மத்திய கல்லூரியும் மட்டுநகரின் சிறப்புகளில் ஒன்று.அந்த மண்ணில் வளர்ந்த பயின்ற நாம் அந்தச் சிறப்புகளில் இருந்தே எமது பயணத்தை தொடங்கினோம்.

மட்டக்களப்ப பத்தி இன்னும் நிறய சொல்லித்தே இரிக்கலாம். மறுகா எழுதுரதுக்கு இடம்பத்தாம போயிரும்.

அதால, அடுத்த இடுகைகளில்
பல்வேறு தகவல்கள் சுவாரஷ்யமான செய்திகளோடு சந்திப்போம்.

என் இனிய மத்திய கல்லூரி நண்பர்களே நீங்களும் இணைந்து கொள்ளூங்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home